நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி?

2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை?

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது.பொதுவாக அனைத்து வருடமும் புதிய கல்வி ஆண்டானது ஜூன் மாதத்தில் துவங்கும். இதற்கான மாணவர்கள் சேர்க்கை இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும். ஆனால் கொரோனாவின் காரணமாக எந்த பள்ளிகளும் திறக்கப்படாததால் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது.

இந்தநிலையில் குழந்தைகளை எப்போது பள்ளியில் சேர்ப்பது, ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த குழந்தைகள் எப்போது பள்ளிக்கு போவார்கள் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும் மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளன.

கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள்.

இந்தநிலையில் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்தநிலையில் நேற்று தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக தகவல் பரவியது. இந்த தகவலுக்கு பள்ளி கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்.

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது. சூழ்நிலை சரியானதும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக இறுதி தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனையடுத்து 1 முதல் 10-வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்தாலும் கூட, பள்ளிக் கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியானது.

அடுத்த மாதத்தில் தான் பள்ளிகளைத் திறப்பது குறித்த ஆலோசனைகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் இதுகுறித்து பெற்றோர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.10-ம் வகுப்பு காலாண்டு, அரையான்டு தேர்வுகளில் 50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. அரசின் ஆல்பாஸ் அறிவிப்பு..?

நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி?

இந்நிலையில் தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது. ஒருவேளை நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்காது எனவும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் தகவல் வெளியானது.ஆனால் இந்த தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் : தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது; சூழல் சரியானதும் பள்ளிகள் திறப்பு குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார் " என்று தெரிவித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.