August 3 school admissions?

School admissions for 2020-21


  • ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தகவல் தவறானது பள்ளிக்கல்வித்துறை விளக்கம். 
  • சென்னையைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு பலகை ஒன்றை வைத்ததில் பரபரப்பு ஏற்பட்டது இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கை நடத்த தற்போதைக்கு சாத்தியமில்லை என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
  • மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்ட சென்னை அரசு உதவிபெறும் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
  • நாளுக்கு நாள் இந்த வைரஸின் தாக்கம் அதிகமாகி கொண்டிருக்கின்ற இந்த சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. 
  • மேலும் பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகாத சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவது என்பது இயலாத காரியம் சில தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
  • ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் அதற்கு முன்பாக மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
*******************************************************************

10th std All Study Materials click here

11th std All Study Materials click here

12th STD All Study Materials click here

6th to 8th All Study Materials click here

9th STD All Study Materials click here

*********************************************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.