ப்ளஸ் டூ ரிசல்ட் எப்போது வெளியாகும்?

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் பணி
 மே 26-இல் பள்ளிக்கு வர ஆசிரியர்களுக்கு உத்தரவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மே 27-ஆம் தேதி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் பணியாற்றுவதற்கான ஆணையைப் பெறுவதற்கான மே 26-ஆம் தேதி அனைத்து முதுநிலை ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதில் ஆசிரியர்கள் கட்டாயம் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தமிழ் ழகத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் காரண மாக அதற்கான பணி ஆணையைப் பெறுவதற்காக அனைத்து முதுநிலை ஆசிரியர்களுக்கு மே 26-ஆம் தேதி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்திருப்பதை தலைமை ஆசிரியர் உறுதி செய்து கொள்ள வேண்டும்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஆசிரியர்கள் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில்,கூடுதல் விடைத்தாள் மதிப் பீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து முதுநிலை ஆசிரியர்கள் கட்டாயம் முகாமில் பணியாற்றிட வேண்டும் என்று, எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து விலக்கும் அளிக்கப்படமாட்டாது எனும் திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.