பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!




தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: முன்​னாள் முதல்​வர் காம​ராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி தின​மாக ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இந்த நாளில் பள்ளி மற்​றும் கல்​லூரி​களில் பயிலும் மாணவர்களிடம் கல்வி தொடர்​பான பேச்​சு, கட்​டுரை, கவிதை, ஒவி​யம் போன்ற போட்​டிகள் நடத்​தப்​படு​கின்​றன.


இந்தாண்டு நடக்கும் போட்​டிகளில் தற்​போது பள்​ளி​களில் பயிலும் மாணவர்​கள், முன்​னாள் மாணவர்​கள், ஆசிரியர்​கள் கலந்து கொள்​ளலாம். இவற்​றில் வெற்றி பெறு​பவர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​கள், பதக்​கங்​கள் வழங்​கப்​படும். இதற்​கான போட்டிகளின் விவரங்​களை​யும் மாணவர்​கள் மற்​றும் ஆசிரியர்​கள் தங்​கள் படைப்​பு​களை​யும் tndiprmhmsmp@gmail.com என்ற மின்னஞ்சல் வாயி​லாக அனுப்பி வைக்​கலாம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.