தொடர் மழை காரணமாக இன்று ( 3.10.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்.

தொடர் மழை காரணமாக இன்று ( 3.10.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்.



தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.


இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.