பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மாற்றம். புதிய தேதி மற்றும் டோக்கன் வழங்கும் நாட்கள் அறிவிப்பு!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தேதி மாற்றம்.. புதிய தேதி மற்றும் டோக்கன் வழங்கும் நாட்கள் அறிவிப்பு

TN Pongal Gift 2023


பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார் என அமைச்சரகள் பெரியகருப்பன், சக்கரபாணி நடத்திய ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது, டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 02,03, 04 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் புத்தாண்டு தினமான ஜனவரி 1 டோக்கன்கள் விநியோகம் இல்லை என்றும் தெரிவித்தார்.

நகர் பகுதியில் நாள் ஒன்றுக்கு 300 அட்டைதாரர்களுக்கும், ஊரகப் பகுதிகளில் நாளொன்றுக்கு 200 அட்டைகளுக்கும் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே பொஙல் பரிசு தொகுப்பு ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து கொடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 05 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.