8th Tamil Notes of Lesson October 2nd week

8th Tamil Notes of Lesson October 2nd week

8ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

  • நாள்        :10-10-2022 முதல் 14-10-2022         
  • மாதம்       :    அக்டோபர்      
  • வாரம்     :   இரண்டாம் வாரம்                                               
  • வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          
  •  பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.திருக்கேதாரம்

                                          2. பாடறிந்து ஒழுகல்

1.கற்றல் நோக்கங்கள்   :

  •  இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்
  • சங்ககாலத் தமிழரின் பண்பாடு பற்றிய கருத்துகளை உணர்தல்

2. கற்பித்தல் துணைக்கருவிகள்:

  • வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • யாருக்கெல்லாம் இசை மிகவும் பிடிக்கும்?
  • ஒருவர் நல்ல மனிதராய் வாழ என்ன செய்ய வேண்டும்?
  • ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

  • ஆசிரியர் : சுந்தரர்
  • சிறப்பு பெயர்கள் : நம்பியாரூரர்,தம்பிரான் தோழர்
  • இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது,

o   புல்லாங்குழல் முழவு இணைந்து ஒலிக்கிறது.

o   நீர்த்திவலைகள் வாரி இறைக்கும்

o   மதயானைகள்கள் மணிகளை வாரி வாரி வீசும்

o   ‘ கிண் ‘ என்ற ஒலி இசையாக முழங்கும்.

  • இல்வா ழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். 
  • பாதுகாத்தல் என்ப து அன்புடையாரைப் பிரியாது வாழ்தல். 
  • பண்பு எனப்படுவது  சான்றோ ர் காட்டிய வழியில் நடத்தல். 

5.ஆசிரியர் செயல்பாடு              :

  • சுந்தரர் பற்றி விளக்குதல்
  • திருக்கேதாரம் நகரின் சிறப்பை அறிதல்
  • மனப்பாடப்பாடலை இசையோடு பாடுதல்.
  • இலக்கணக்குறிப்பை விளக்குதல்
  • பாடறிந்து ஒழுகல் பாடற்கருத்தைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்.

6.கருத்துரு வரைபடம்:

திருக்கேதாரம்




7.மாணவர் செயல்பாடு:

  • மாணவர்கள் பத்தி பத்தியாகப் படித்தல்.
  • திருகேதார நகரின் சிறப்பை அறிதல்
  • தேவாரத்தைப் பற்றி அறிந்துகொள்ளுதல்
  • பாடறிந்து ஒழுகல் பாடற்கருத்தை அறிந்துகொள்ளுதல்

8.வலுவூட்டல்:

  • விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

  •  1.காட்டிலிருந்து வந்த ________ கரும்பைத் தின்றன.
  •  2.தேவாரத்தினைத் தொகுத்தவர் ___________

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

  • 3. தேவாரம்-குறிப்பு வரைக
  • 4. பாடறிந்து ஒழுகல்- தலைப்பை விளக்குக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

  • 5.தற்காலத்தில் வழிபாட்டுப் பாடல்கள் இசையோடு பாடப்படுகின்றனவா? விளக்குக

10.குறைதீர் கற்றல்:

  • மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

  • பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

  • இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்
  • சங்ககாலத் தமிழரின் பண்பாடு பற்றிய கருத்துகளை உணர்தல்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.