10ம் வகுப்பு மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு!!!

10ம் வகுப்பு மாணவர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு!!!


இந்தியாவில் அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
வறுமையின் காரணமாக கல்வி பாதிப்படைய கூடாது என்பதற்கு அரசு இலவச கல்வியை வழங்கி வருகிறது. மேலும் கற்றலில் திறமையுள்ள மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி உதவித்தொகை திட்டமும் செயல்பாட்டில் இருக்கிறது. இத்திட்டத்தின் படி இந்தியாவில் வருடந்தோறும் தேசிய அளவில் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மேல்நிலை மற்றும் உயர்கல்விக்கான உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது.

இதையடுத்து மாநில அளவிலும் இந்த திறனாய்வு நேர்வு நடத்தப்பட்டு மாநில அரசு சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 11, 12ம் வகுப்புகளில் ஒவ்வொரு மாதமும் 1,250 ரூபாய் வழங்கப்படும். அதனை தொடர்ந்து உயர்கல்வி பயிலும்போது மாணவர்களுக்கு மாதம் ரூ2,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு திறனாய்வுத் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த வருடம் அக்டோபர் மாதம் 29ம் தேதி வெளியானது.

இதனிடையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தேர்வு வரும் ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வினாக்கள் 9, 10ஆம் வகுப்பு பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையிலும் தயாரிக்கப்படும். பள்ளிகள் மூலமாக தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் வருகிற 19ம் தேதி இணையதளம் வாயிலாக தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.