6th Tamil Refresher Course Answer key 12. படித்துப் பொருள் உணர்தல்

6th Tamil Refresher Course Answer key 12

Topic 12. படித்துப் பொருள் உணர்தல்

6th Tamil Refresher Course Answer key 12.  படித்துப் பொருள் உணர்தல். 6th Standard Tamil புத்தாக்கப் பயிற்சி விடைகள் மதிப்பீட்டுச் செயல்பாடு 1. 6th Refresher Course Module Books2nd to 12th  Refresher Course Book and and Answers. 6th Tamil Refresher Course Answer key Topic 11.

6th Tamil Refresher Course Answer key Topic 12. 
படித்துப் பொருள் உணர்தல்

6th Tamil Refresher Course Answer key

6th Tamil Refresher Course Answer key 12

மதிப்பீட்டுச் செயல்பாடு:

அ) பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து வினாக்களுக்கு விடை எழுதுக.

தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று: உலகின் முதன்மொழியும் ஆகும். தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள். யாப்பு. அணி என ஐந்து இலக்கணக் கூறுகளைக் கொண்டு திகழ்கிறது. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலடி உலகிற்கான உயர்ந்த கருத்தை வெளிப்படுத்துகிறது. உலகிலுள்ள எல்லா ஊரும் நம்முடைய ஊரே. உலகில் உள்ள எல்லா மக்களும் நம் உறவினர்களே என்பதுதான் அக்கருத்து. 

1. தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?

  • தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்.

2. "உறவினர்" என்னும் பொருள் தரும் சொல்லைப் பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.

  •  கேளிர் 

3. தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?

  • தமிழிலக்கணம் 
  1. எழுத்து, 
  2. சொல், 
  3. பொருள், 
  4. யாப்பு, 
  5. அணி என ஐந்து இலக்கணப் பிரிவுகள் உள்ளன.

4. தமிழிலக்கணம், புறநானூறு - சொற்களைப் பிரித்து எழுதுக.

  •  தமிழ்+இலக்கணம் , புறம்+நான்கு+நூறு

5. உலகிற்கான உயர்ந்த கருத்தை உணர்த்திய பாடலடியை எழுதுக.

  • யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற புறநானூற்றுப் பாடலடி உலகிற்கான உயர்ந்தகருத்தை வெளிப்படுத்துகிறது

6. பத்தியில் உள்ள பெயர்ச்சொற்கள் ஐந்தினை எடுத்து எழுதுக. 

  • எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.