பிளஸ் 2 தேர்வு பணிகள் நாளை முதல் துவக்கம்

பிளஸ் 2 தேர்வு பணிகள் 

நாளை முதல் துவக்கம்


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான வெற்று விடைத்தாள் ஒருங்கிணைப்பு பணிகளை நாளை முதல் துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு, மே, எல் துவங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணி களை, மாவட்ட கல்வி அலுவலர் கள் துவங்கி உள்ளனர்.

மாணவர்கள் விடை எழுதும் முதன்மை தாள்கள் மற்றும் மாணவர்களின் தகவல் இடம் பெறும் முகப்பு சீட்டை ஒன்றாக இணைக்க வேண்டிய பணிகள் துவங்க உள்ளன. மொழி பாடங்களுக்கு பக்கங்களுக்கு கோடிட்ட வெற்று தாள்கள் வழங்கப்படும். உயிரியல், தாவரவியல், விலங்கியல் என தனித்தனி முதன்மை தாள்கள், ஒரே முகப்பு தாளுடன் இணைத்து தரப்படும். கணக்கு பதிவியல் பாடத்துக்கு, கட்டங் கள் உள்ள விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. 

வரலாறு மற்றும் புவியியலுக்கு இந்திய வரைபட தாளும், வணிக கணிதம் மற்றும் புள்ளி யியலுக்கு, வரை கட்ட தாளும் இணைத்து தரப்படும். இதன்படி, முதன்மை விடைத்தாள், முகப்பு தாள் மற்றும் வரைபடம் இணைப்பு பணி களை, நாளை துவங்க வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.