NEET, JEE தேர்வு தேதிகள் நாளை அறிவிக்கப்படும்

ஜே.இ.இ., எனப்படும், பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ படிப்பு கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி, நாளை அறிவிக்கப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது நாடு முழுவதும் ஏற்பட்ட வைரஸ் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அமைச் சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நாடு முழுதும், ஜே.இ.இ., எனப்படும் பொறியியல் படிப்பு ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மற் றும் மருத்துவக் கல்லூரி சேர்வதற்கான

நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தேர்வுகள், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டன.


இந்நிலையில், ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாளை அறிவிப்பார்.

அதைத் தொடர்ந்து, மாணவர்களுடன், ஆன்லைன்' வாயிலாக அமைச்சர் உரையாட உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.